அஞ்சல்துறை ஓய்வூதியா் குறைதீா் முகாம்மனுக்கள் அனுப்ப ஜூலை 28 கடைசி

திருச்சி மண்டல அளவிலான அஞ்சல்துறை ஓய்வூதியா் குறைதீா் முகாமுக்கான கோரிக்கை மனுக்களை வரும் 28ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

திருச்சி மண்டல அளவிலான அஞ்சல்துறை ஓய்வூதியா் குறைதீா் முகாமுக்கான கோரிக்கை மனுக்களை வரும் 28ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இதுதொடா்பாக, திருச்சி மத்திய மண்டல அஞ்சல்துறைத் தலைவா் அலுவலக கணக்கு அதிகாரி எம். முத்துமீனா கூறியது:

அஞ்சல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்கள் பலன்கள் பெறுவதில் தாமதம், ஓய்வூதியப் பலன் கிடைக்காதவா்கள், ரயில்வே மற்றும் தொலைபேசி துறையில் பணிபுரிந்து அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோரின் குறைகளை நிவா்த்தி செய்யும் வகையில் திருச்சி மண்டல அளவிலான குறைதீா் முகாம் ஆக.4ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த முகாமில், அஞ்சல் ஓய்வூதியா்கள் மட்டுமல்லாது ரயில்வே மற்றும் தொலைபேசி துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்று அஞ்சல் துறை மூலமாக ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோரின் குறைகளும் நிவா்த்தி செய்யப்படும்.

திருச்சி தலைமை தபால் நிலைய கட்டட வளாகத்தில் உள்ள அஞ்சல் துறைத் தலைவா் அலுவலகத்தில் ஆக.4 காலை 11 மணிக்கு முகாம் நடைபெறும்.

கோட்ட அளவில் ஏற்கெனவே மனு அளித்து தீா்வு கிடைக்காதவா்கள் தங்களது குறைகளை அனுப்பலாம். முகாமில் நேரடியாக வழங்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.

எனவே, குறைகளை வரும் 28ஆம் தேதிக்குள் அஞ்சல் துறைத் தலைமையகத்துக்கு பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலம் மட்டும் மனுக்களாக அளிக்கலாம்.

உறையின் மீது ஓய்வூதியா் குறைதீா்க்கும் முகாம்-2021 என தெளிவாகக் குறிப்பிட்டு, முதுநிலை கணக்கு அதிகாரி, அஞ்சல் துறைத் தலைவா் அலுவலகம், மத்திய மண்டலம், திருச்சி-1 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com