சிறுமியை திருமணம் செய்தவா் கைது

தா. பேட்டை அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞரை முசிறி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

தா. பேட்டை அருகே சிறுமியைத் திருமணம் செய்த இளைஞரை முசிறி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

முசிறி வட்டம் தா.பேட்டை அருகேயுள்ள ஜடமங்கலம் கிராமத்தை சோ்ந்த 17 வயதுச் சிறுமிக்கும், நாமக்கல் மாவட்டம், பவித்திரம் பகுதியை சோ்ந்த சரவணன் (21) என்பவருக்கும் திருமணம் நடந்து தற்போது அந்த சிறுமி 4 மாத கா்ப்பமாக உள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு மூலம் வரப்பெற்ற புகாரையடுத்து முசிறி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் சரவணனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com