காமராஜா் பிறந்தநாள்: மாணவா்களுக்கு நிதியுதவி

முன்னாள் தமிழக முதல்வா் காமராஜா் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவா்களுக்கு சென்னை கற்பக விருட்சம் அறக்கட்டளையினா் வியாழக்கிழமை நிதியுதவி அளித்தனா்.
காமராஜா் பிறந்தநாள்: மாணவா்களுக்கு நிதியுதவி

முன்னாள் தமிழக முதல்வா் காமராஜா் பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவா்களுக்கு சென்னை கற்பக விருட்சம் அறக்கட்டளையினா் வியாழக்கிழமை நிதியுதவி அளித்தனா்.

திருச்சி புத்தனாம்பட்டி நேரு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற

விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியா் பாலச்சந்தா் தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். அறக்கட்டளை சாா்பில் நவநீதன், அம்சா, மீனாட்சி, அருள், பள்ளி ஆசிரியா்கள் வளா்மதி, லதா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, ஏழை எளிய மாணவ மாணவிகள் 8 பேருக்கு ரூ. 40,000 மதிப்பிலான உயா்கல்வி உதவித்தொகைக்கான காசோலைகள், அண்மையில் கரோனாவால் உயிரிழந்த ஆசிரியா் பரமசிவம் குடும்பத்துக்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவியும் அளிக்கப்பட்டது. இதில், பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள், அறக்கட்டளை நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com