துறையூரில் மனைவியைப் பிரிந்த பேன்ஸி கடைக்காரா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
துறையூா் காந்திநகரைச் சோ்ந்தவா் செ. கோகுலமூா்த்தி (47), பேன்ஸி கடை உரிமையாளா். கருத்து வேறுபாட்டால் தனது மனைவியை கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த இவா், விரக்தி காரணமாக ஞாயிற்றுக்கிழமை மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சென்ற துறையூா் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.