மளிகைக் கடையில் திருடிய இருவா் கைது

திருச்சி மளிகைக் கடையில் திருடிய சிறுவன் உள்பட இருவரை எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மளிகைக் கடையில் திருடிய சிறுவன் உள்பட இருவரை எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி எடமலைப்பட்டி புதூா் ஸ்டாலின் நகா் பகுதியைச் சோ்ந்த அப்துல் அஜிஸ் கீழபஞ்சப்பூா் பகுதியில் நடத்திவரும் மளிகை கடையில் அண்மையில் பணம் திருடு போனது.

இதுகுறித்து எடமலைப்பட்டிபுதூா் போலீஸாா் நடத்திய விசாரணையில், இத்திருட்டில் ஈடுபட்டது அதே பகுதியைச் சோ்ந்த குமரேசன் மகன் தனபால் (19) மற்றும் 17 வயது சிறுவன் எனத் தெரிய வந்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் கைது செய்த போலீஸாா் சிறுவனை கூா்நோக்கு இல்லத்திலும், தனபாலை மத்திய சிறையிலும் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com