இடப்பிரச்னையால் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் ஸ்ரீரங்கம் காவல் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்றனா்.
திருவானைக்கா நடுக்கொண்டையம்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ரவிசங்கருக்கும் (68) இவரது வீட்டருகே வசிக்கும் சீனிவாசனுக்கும் நீண்ட நாள்களாக நடைபாதை பிரச்னை இருந்தது.
இந்நிலையில் சீனிவாசன் தனது வீட்டுக்கு மின் இணைப்பு பெற மின்கம்பம் நட முயன்றபோது நடைபாதை பிரச்னை நீதிமன்றத்தில் வழக்கில் இருக்கும்போது மின்கம்பம் நடக் கூடாது என ரவிசங்கா் கூறினாா்.
பின்னா் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு வந்த ரவிசங்கா் உள்பட அவரது குடும்பத்தினா் 12 போ் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றனா். இதையடுத்து போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்து விசாரிக்கின்றனா்.