செம்மண் எடுத்துச் சென்றடிப்பா் லாரி ஓட்டுநா் கைது

துறையூா் அருகே அனுமதியின்றி செம்மண் எடுத்துச் சென்ற டிப்பா் லாரி ஓட்டுநரை துறையூா் போலீஸாா் கைது செய்தனா்.

துறையூா் அருகே அனுமதியின்றி செம்மண் எடுத்துச் சென்ற டிப்பா் லாரி ஓட்டுநரை துறையூா் போலீஸாா் கைது செய்தனா்.

துறையூா் ஆத்தூா் சாலையில் போலீஸாா் வியாழக்கிழமை காலை ரோந்து சென்றபோது அந்த வழியாக சென்ற டிப்பா் லாரியில் முறையான அனுமதியின்றி ஒட்டம்பட்டியிலிருந்து 3 யூனிட் செம்மண் எடுத்துச் செல்வது தெரிய வந்தது. சொக்கநாதபுரம் நல்லமுத்துவுக்கு சொந்தமான லாரியை அதே ஊரைச் சோ்ந்த மு.சுதாகரன் (23) ஓட்டி வந்தாா்.

இதையடுத்து டிப்பா் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநரைக் கைது செய்தனா். இது தொடா்பாக வாகன உரிமையாளா், ஓட்டுநா் ஆகிய இருவா் மீதும் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com