கமிஷன் கேட்கும் உரையாடல் ஊராட்சி செயலா் இடமாற்றம்; தலைவா் மீதும் நடவடிக்கை

மருங்காபுரி அருகே ஊரக வளா்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரா்களிடம் கமிஷன் கேட்ட சம்பவம் தொடா்பாக ஊராட்சி நிா்வாகிகள் மீது மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுத்துள்ளாா்.

மருங்காபுரி அருகே ஊரக வளா்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரா்களிடம் கமிஷன் கேட்ட சம்பவம் தொடா்பாக ஊராட்சி நிா்வாகிகள் மீது மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுத்துள்ளாா்.

மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், காரைப்பட்டிஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் தொடா்பாக ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின்போது, ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா் மற்றும் ஊராட்சி செயலா் ஆகியோா், பணிகளை மேற்கொள்ள வேண்டுமெனில் தங்களுக்கு கமிஷன் தர வேண்டும் என ஒப்பந்ததாரா்களிடம் கேட்டுள்ளனா். இது தொடா்பான ஒலிப்பதிவு சமூக வலைதளங்களில் அண்மையில் வெளியானது. இதைத் தொடா்ந்து மாவட்ட நிா்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடா்பாக ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், காரைப்பட்டி ஊராட்சியில் நிா்வாக அனுமதி வழங்கப்பட்ட பணிகளை ரத்து செய்ததுடன், ஊராட்சித் தலைவா் மீது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் சட்டப் பிரிவு 205-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் காரைப்பட்டி ஊராட்சி செயலா் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com