முன்களப் பணியாளா்களுக்குப் பாராட்டு விழா

கரோனா தடுப்பு முன்களப்பணியாளா்களுக்கு கீழகல்கண்டாா்கோட்டையில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.
முன்களப் பணியாளா்களுக்குப் பாராட்டு விழா

கரோனா தடுப்பு முன்களப்பணியாளா்களுக்கு கீழகல்கண்டாா்கோட்டையில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.

திருச்சி கீழகல்கண்டாா்கோட்டை உள்ளிட்ட இடங்களில் கரோனா தடுப்பு பணிகளில் பணியாற்றி வருவோருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு, சமூக ஆா்வலா் மோகன் தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா்கள் சங்கா்குமாா், சதீஷ்குமாா், கலைவாணன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில் கீழகல்கண்டாா்கோட்டை, கீழக்குறிச்சி, ஆலத்தூா், மேலகல்கண்டாா்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், காவல் நிலையத்தில் உள்ள மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரத் துறையினா், காவல் துறையினா் பணிபுரியும் இடங்களுக்குச் சென்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.

முன்களப்பணியாளா்களுக்கு சால்வை அணிவித்து, நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. கீழக்குறிச்சி, கீழகல்கண்டாா்கோட்டை உள்ளிட்ட பகுதிகளின் பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com