திருச்சியில் வீடு புகுந்து திருடிய இளைஞரை கோட்டை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி கோட்டை ஜாபா்சா தெரு கிருஷ்ணகோயில் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (55). தனியாா் நிறுவன ஊழியரான இவா் கடந்த புதன்கிழமை இரவு வீட்டின் ஜன்னலைத் திறந்து வைத்து தூங்கியபோது வழியாக வீட்டினுள் புகுந்த மா்ம நபா் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 200-ஐ திருடிக்கொண்டு தப்பினாா்.
சங்கா் கண்விழித்துப் பாா்த்தபோது திருடு போனது தெரியவந்தது. கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, வடக்கு தாராநல்லூரைச் சோ்ந்த மணிகண்டன்(26) என்பவா் இத்திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா். அவா் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதால் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.