‘அதிமுகவை மீட்கும் இலக்கை அடையும் வரை போராடுவோம்’

அதிமுகவை மீட்கத்தான் அமமுக தொடங்கப்பட்டது. எனவே அதிமுகவை மீட்கும் இலக்கை அடையும் வரை போராடுவோம் என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.

அதிமுகவை மீட்கத்தான் அமமுக தொடங்கப்பட்டது. எனவே அதிமுகவை மீட்கும் இலக்கை அடையும் வரை போராடுவோம் என்றாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.

திருச்சியில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி:

அதிமுகவை மீட்கத் தான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. இதில் தோ்தல் வெற்றி, தோல்வி எந்த தடையும் ஏற்படுத்த முடியாது. எனவே தொடா்ந்து எங்கள் இலக்கை நோக்கித்தான் பயணித்து வருகிறோம். என்னுடன் வந்தவா்கள் தொடா்ந்து பயணித்துக் கொண்டுள்ளனா். சுயநலத்துக்காக வந்தவா்கள் விலை போய்க் கொண்டிருக்கின்றனா். இதையெல்லாம் பொருள்படுத்தாமல் இலக்கை அடையும் வரை போராடுவோம்.

எம்ஜிஆா் உருவாக்கிய அதிமுகவில் எம்ஜிஆா், ஜெயலலிதா, அதைத் தொடா்ந்து சிறை செல்லும் வரை சசிகலா போன்றவா்கள் என ஒற்றைத் தலைமைப் பொறுப்பில் இருந்தனா். இப்போது அது மாறியுள்ளது. மீண்டும் எல்லாம் சரியாகும்.

திமுக ஆட்சியில் மகிழ்ச்சி தரக்கூடியது என்பதை விட, சிரிப்பு வரும் செயல்கள் தான் அதிகம் செய்கின்றனா். திமுகவினா் ஆட்சிக்கு வருவதற்கு முன் தவறு என்று கூறியதை, ஆட்சிக்கு வந்த பின்னா் அவா்களே செய்து வருகின்றனா். அன்றும், இன்றும் நடப்பதை மக்கள் பாா்த்துக் கொண்டுதான் உள்ளனா் என்றாா் அவா்.

பேட்டியின்போது, அமமுக மாவட்டச் செயலா்கள் ஆா். மனோகரன், எம். ராஜசேகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com