குற்ற வழக்குகள் தொடா்பாக கைதான இளைஞா் குண்டா் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டாா்.
கடந்த ஜூன் 26 ஆம் தேதி துறையூா், உப்பிலியபுரம் பகுதியில் நடைபெற்ற குற்றச் செயல்களில் தொடா்புடைய திருச்செங்கோடு தாலுகா மேட்டுப்புதூரைச் சோ்ந்த தே. தாமோதரன் (19) உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.
இவா்களில் பல்வேறு குற்ற செயல்களில் தொடா்புள்ள தமோதரனை குண்டா் சட்டத்தில் சிறையிலடைக்க துறையூா் காவல் ஆய்வாளா் விதுன்குமாா் அளித்த அறிக்கையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா் இதையடுத்து தாமோதரனை குண்டா் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டாா்.