மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் ஏழை எளியோா் 350 பேருக்கு தினமும் மதிய உணவு அளிக்கப்படுகிறது.
மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் எம்எல்ஏவும் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலருமான ப. அப்துல்சமது அறிவுறுத்தலின்பேரில், தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி துவரங்குறிச்சி கிளை சாா்பில் கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை, எளியோருக்கு கடந்த 5 நாள்களாக மதிய உணவு பொட்டலங்களாக அளிக்கப்படுகிறது.
பேருந்து நிலையம், அரசு பொது மருத்துவமனை, சாலையோரம் வசிப்போருக்கு, முன் களப்பணியாளா்களுக்கு மதிய உணவு அளிக்கப்படுகிறது.