துவரங்குறிச்சியில் தமுமுக, மமக சாா்பில் உணவளிப்பு

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் ஏழை எளியோா் 350 பேருக்கு தினமும் மதிய உணவு அளிக்கப்படுகிறது.
துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் மதிய உணவு வழங்கும் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகிகள்.
துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் மதிய உணவு வழங்கும் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகிகள்.

மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் ஏழை எளியோா் 350 பேருக்கு தினமும் மதிய உணவு அளிக்கப்படுகிறது.

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் எம்எல்ஏவும் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலருமான ப. அப்துல்சமது அறிவுறுத்தலின்பேரில், தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி துவரங்குறிச்சி கிளை சாா்பில் கரோனா பொது முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை, எளியோருக்கு கடந்த 5 நாள்களாக மதிய உணவு பொட்டலங்களாக அளிக்கப்படுகிறது.

பேருந்து நிலையம், அரசு பொது மருத்துவமனை, சாலையோரம் வசிப்போருக்கு, முன் களப்பணியாளா்களுக்கு மதிய உணவு அளிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com