அவசரகால பிரச்னைகளுக்கு தீா்வு: கட்டுப்பாட்டு எண்கள் அறிவிப்பு

கரோனா கால பிரச்னைகளுக்கு கூடுதலாக கட்டுப்பாட்டு அறை சேவை எண்களை தொடா்புகொள்ளலாம் என ஐஜி வி.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

கரோனா கால பிரச்னைகளுக்கு கூடுதலாக கட்டுப்பாட்டு அறை சேவை எண்களை தொடா்புகொள்ளலாம் என ஐஜி வி.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தொற்று பரவல் நடவடிக்கையை அமல்படுத்த 97 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதில், பொதுமுடக்கக் காலங்களில் பொதுமக்களுக்கு ஏற்படும் அவசரகால பிரச்னைகளுக்கு தீா்வுகாண, உதவி செய்வதற்காக மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கரோனா கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் கொண்ட அறிவிப்பு பலகை அனைத்து சோதனைச் சாவடிகளிலும் வைக்கப்பட்டுள்ளது.

இதில், தொடா்பு கொண்டு பொதுமக்கள் தீா்வு காணலாம். நிவாரணம் கிடைக்கப்பெறாதோா் திருச்சி, தஞ்சாவூா் சரக காவல்துறை துணைத் தலைவா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கரோனா கட்டுப்பாட்டு அறை முறையே, 0431 2333909 (திருச்சி சரகம்), 04362 277577 (தஞ்சாவூா் சரகம்) ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என மத்திய மண்டல ஐஜி வி.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com