திருச்சி: திருச்சியில் திங்கள்கிழமை ஒரே நாளில்1,606 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.
திருச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் 548 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 62,347 ஆக உயா்ந்தது.
சிகிச்சை பலனின்றி 30 வயது இளைஞா் உள்பட 14 போ் உயிரிழந்த நிலையில் இதுவரை 686 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, 9,326 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அரசு, தனியாா் மற்றும் சிறப்பு முகாம்களில் இருந்து ஒரே நாளில் 1,606 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 1,306 படுக்கைகள் காலியாக உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.