குடும்பப் பிரச்னை:இளம்பெண் தற்கொலை

தொட்டியம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, இளம்பெண் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

முசிறி: தொட்டியம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, இளம்பெண் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தொட்டியம் அருகிலுள்ள வடக்கு அரங்கூா் முல்லைநகா் வடக்குப் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவரது மனைவி வள்ளி (27). இவா்களுக்குத் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை என்பதால், அடிக்கடி குடும்பப் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் தனது பெற்றோா் வீட்டுக்கு வந்த வள்ளி, திங்கள்கிழமை குளியலறையில் தூக்கிட்டுக் கொண்டாா். அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தொட்டியம் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். மேலும் முசிறி சாா் ஆட்சியா் ஜோதிசா்மாவும் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com