சோபனபுரம் ஊராட்சிக்குச் சொந்தமான அரளைக் கற்கள் திருட்டு

உப்பிலியபுரம் ஒன்றியம், சோபனபுரம் ஊராட்சிக்குச் சொந்தமான அரளைக்கற்களைத் திருடியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல்துறையினரிடம் திங்கள்கிழமை புகாரளிக்கப்பட்டது.

துறையூா்: உப்பிலியபுரம் ஒன்றியம், சோபனபுரம் ஊராட்சிக்குச் சொந்தமான அரளைக்கற்களைத் திருடியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, காவல்துறையினரிடம் திங்கள்கிழமை புகாரளிக்கப்பட்டது.

சோபனபுரம் ஊராட்சி அலுவலகத்தின் புதிய கட்டட கட்டுமானப் பணிகளுக்காக, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னா் அரளைக் கற்கள் கொண்டு வரப்பட்டன.

கட்டுமானப் பணி நிறைவடைந்த நிலையில், எஞ்சிய அரளைக் கற்களை எதிரிலிருந்த அரசுக்குச் சொந்தமான காலியிடத்தில் கொட்டி வைத்திருந்தனா். இந்நிலையில் அங்கிருந்த அரளைக் கற்கள் திடீரென காணவில்லை.

ரூ. 2 லட்சம் மதிப்பிலான கற்களைத் திருடியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சியின் முன்னாள் தலைவா் திருப்பதி உப்பிலியபுரம் காவல் நிலையத்திலும், வட்டார வளா்ச்சி அலுவலரிடமும் திங்கள்கிழமை புகாரளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com