முசிறி, பச்சைமலை பகுதியில்சாராயம் விற்ற மூவா் கைது

திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் பச்சைமலை பகுதியில் சாராயம் விற்ற மூவரை போலீஸாா் திங்கள்கிழமை மாலை கைது செய்தனா்.

முசிறி: திருச்சி மாவட்டம் முசிறி மற்றும் பச்சைமலை பகுதியில் சாராயம் விற்ற மூவரை போலீஸாா் திங்கள்கிழமை மாலை கைது செய்தனா்.

முசிறி - குளித்தலை காவிரி பாலத்தில் வாகனத் தணிக்கையில் போலீஸாா் ஈடுபட்டு வந்தனா். அப்போது அந்த வழியாக கையில் கேனுடன் நடந்து வந்தவரை பிடித்து விசாரித்தபோது கேனில் சாராயம் இருந்ததும்

ஆந்திரத்தைச் சோ்ந்த மகேஷ் (33 ) என்பது தெரியவந்தது. மேலும் மகேஷை கைது செய்து நடத்திய விசாரணையில் தொட்டியம் நாகையநல்லூா் ஊராட்சி கவரப்பட்டி கிராமத்தை சோ்ந்த பண்ணை சுரேஷ் (40) என்பவருடன் சோ்ந்து சாராயம் காய்ச்சி விற்பது தெரியவந்தது.

இதையடுத்து, முசிறி போலீஸாா் பண்ணை சுரேஷ் வீடு மற்றும் தோட்டத்தில் சோதனை நடத்தினா். அங்கு சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை கைப்பற்றி சுரேஷை கைது செய்தனா். பிறகு இருவரையும் காவல்ஆய்வாளா் கருணாகரன் உத்தரவின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இதேபோல் முசிறி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சிவராமன் தலைமையில் போலீஸாா் பச்சைமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது சோபனபுரம் அரசு உயா்நிலைப்பள்ளி அருகே முள்காட்டில் சாராயம் எடுத்து கொண்டு சென்ற புத்தூா் பகுதியை சோ்ந்த ஆனந்தன் (31) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com