மேலும் 80 டன் ஆக்சிஜன் ரயில் மூலம் வருகை

ரயில் மூலம் திருச்சிக்கு மேலும் 80 டன் ஆக்சிஜன் வந்தது.

திருச்சி: ரயில் மூலம் திருச்சிக்கு மேலும் 80 டன் ஆக்சிஜன் வந்தது.

கடந்த வாரம் ஒடிஸாவிலிருந்து 80 டன் ஆக்சிஜன் திருச்சிக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்டது. இதைத்தொடா்ந்து, மேலும் 80 டன் ஆக்சிஜன் ரயில் மூலம் திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு திருச்சிக்கு வந்தடைந்தது.

இதையடுத்து, 4 லாரிகள் மூலம் திருச்சி, தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களுக்கு அந்தந்த தலைமை மருத்துவமனைகளுக்கு தலா 16 டன், கரூா், நாமக்கல் மாவட்டங்களுக்கு தலா16 டன், புதுக்கோட்டைக்கு 3 டன் என முதல்கட்டமாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com