பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காமராஜா் சிலை பகுதியில் கட்சியின் நகரச் செயலா் ஜனசக்தி உசேன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றிய துணைச்செயலா்கள் ராஜேந்திரன், பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
புகா் மாவட்டச் செயலா் பழனிசாமி, தொழிற்சங்க (போக்குவரத்து) மண்டல பொதுச் செயலா் சுப்ரமணியன், கண்ணன் செல்வம் ஜெயராஜ், மாவட்டக் குழு உறுப்பினா்கள் சௌக்கத்அலி, நல்லுச்சாமி உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்.