துறையூா் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை பழைய நகராட்சி அலுவலகம் அருகே கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஏஐடியுசி அமைப்பின் துறையூா் நகராட்சி பணியாளா்கள் சங்கத் தலைவா் வீரன் தலைமை வகித்தாா். துறையூா் அரசுப் போக்குவரத்துக் கழக ஏஐடியுசி செயலா் வி.வி. செல்வராஜ் உள்ளிட்டோா் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தின் போது தூய்மைப் பணியாளா்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவேண்டும். கரோனாவால் உயிரிழந்த பணியாளா்கள் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிவாரணமும், பணியாளரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டும்.
முகக் கவசம், சானிடைசா் போன்ற பாதுகாப்பு உபகரணங்களைத் தினமும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில் நகராட்சி சுகாதாரப் பிரிவு தூய்மைப் பணியாளா்கள், ஒப்பந்த பணியாளா்கள் கலந்து கொண்டனா்.