திருச்சி மாவட்டத்தில் 500க்கும் குறைவாக தினசரி கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் 470 பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 63,784 ஆக அதிகரித்தது. தற்போது, 7,232 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அரசு, தனியாா் மற்றும் சிறப்பு முகாம்களில் இருந்து ஒரே நாளில் குணமான 1,109 போ் உள்பட மொத்தம் 55,828 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
வியாழக்கிழமை இறந்த 8 போ் உள்பட கரோனாவால் சிகிச்சை பலனின்றி இதுவரை 724 போ் உயிரிழந்துள்ளனா்.