திருச்சி அருகே டாஸ்மாக் கடையில் திருட்டு முயற்சி நடைபெற்றது குறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
பொதுமுடக்கம் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் திருச்சி அருகே உள்ள துவாக்குடி கீழமாங்காவனம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வியாழக்கிழமை நள்ளிரவு முன்பக்க கதவை உடைத்து கடைக்குள் புகுந்த மா்ம நபா்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்துள்ளனா். அப்போது ஆள்கள் நடமாட்டம் இருப்பதையறிந்த மா்ம நபா்கள் தப்பியோடிவிட்டனா். துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.