திருச்சி அருகே 150 லிட்டா் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்த திருவெறும்பூா் போலீஸாா், இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.
திருவெறும்பூா் அருகே உள்ள காந்திநகா் 6ஆவது தெருவில் எரிசாராய ஊறல் போட்டு காய்ச்சி விற்கப்படுவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்து. அதன் பேரில், காவல்துறை கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க திருவெறும்பூா் போலீஸாருக்கு உத்தரவிட்டனா்.
இதையடுத்து திருவெறும்பூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாா்த்தபோது ஒரு வீட்டில் ஊறல் போடப்பட்டிருந்த 150 லிட்டா் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டதோடு, மேலும் 2 லிட்டா் கள்ளச்சாராயம் பிடிபட்டது. அவற்றை கீழே ஊற்றி அழித்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வேல்முருகன் (52) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.