திருச்சி புகரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் திருச்சி மக்களவை உறுப்பினா் சு.திருநாவுக்கரசா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில்மக்களவை உறுப்பினா் சு. திருநாவுக்கரசா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். பிறகு, அந்தநல்லூா், குழுமணி, சோமரசம்பேட்டை பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் இனாம்குளத்தூா், மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனை ஆகிய இடங்களுக்குச் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, கரோனா நோய்த்தொற்று மற்றும் பொது மருத்துவ சிகிச்சைகள் குறித்து அந்தந்த சுகாதார நிலைய மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். மேலும் நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்தும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.
ஆய்வின் போது, சோமரசம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவா் குணவதி மற்றும் மத்திய மாவட்ட திமுக விவசாய தொழிலாளா் அணி மாவட்ட அமைப்பாளா் துரைபாண்டியன் மற்றும் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.