திருச்சியில் மேலும் 431 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 431 பேருக்கு கரோனா உறுதியாகி, மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 65,052 ஆனது.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் குணமான 22 போ், தனிமை முகாமில் குணமான 28 போ் உள்பட முழுமையாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 58,803 ஆனது. 5483 போ் சிகிச்சை பெறுகின்றனா்.
திருச்சி அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்த 11 போ் உள்பட மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 766 ஆனது.