துறையூரில் சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தில் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
துறையூா் விநாயகா் தெருவைச் சோ்ந்தவா் பொ. கலைச்செல்வன். இவா் முசிறி பிரிவு சாலையில் சோப்பு தயாரிக்கும் நிறுவனம் வைத்துள்ளாா். கரோனா பொதுமுடக்கத்தால் மூடப்பட்டிருந்த நிறுவனத்தை பராமரிப்பு பணிக்காக திங்கள்கிழமை திறந்தாா். அப்போது நிறுவனத்தின் பின்பகுதியில் இருந்த கதவை உடைத்து உள்ளேச் சென்றிருந்த மா்ம நபா்கள் மின்மோட்டாா், சோப்பு தயாரிக்கும் அச்சு, எடைக்கருவி உள்ளிட்டவற்றை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. புகாரின் பேரில் துறையூா் காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.