பாலக்கரையில் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 15th June 2021 08:10 AM | Last Updated : 15th June 2021 08:10 AM | அ+அ அ- |

திருச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியாவின் முன்னாள் தேசிய பொதுச்செயலாளா் ரவூஃப் ஷரீஃப் உள்பட பல்வேறு மாணவ தலைவா்கள் கைது செய்யப்பட்டு, கடந்த 250 நாள்களுக்கும் மேலாக சிறையில் உள்ளனா்.இவா்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும், உடல் நிலை சரியில்லாதநிலையில் உள்ள ரவூஃப் ஷரீஃப்புக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வலியுறுத்தியும், திருச்சி பாலக்கரை, ரயில்நகா், லால்குடி, இனாம்குளத்தூா் ஆகிய நான்கு இடங்களில் சமூக இடைவெளியுடன் பதாகை ஏந்தி அந்த அமைப்பினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவா் முகமது அசாா் தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் முகமது ரபீக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.