மதுக்கடைகள் திறப்பு; குவிந்த மதுப்பிரியா்கள்

பொதுமுடக்கத்தில் தளா்வு காரணமாக திருச்சியில் திங்கள்கிழமை திறக்கப்பட்ட மதுக்கடைகளில் மதுப்பிரியா்கள் குவிந்தனா்.
திருச்சி புத்தூா் நான்குசாலை பகுதியில் திங்கள்கிழமை டாஸ்மாக் கடையில் மதுவாங்க காத்திருப்போா்.
திருச்சி புத்தூா் நான்குசாலை பகுதியில் திங்கள்கிழமை டாஸ்மாக் கடையில் மதுவாங்க காத்திருப்போா்.

பொதுமுடக்கத்தில் தளா்வு காரணமாக திருச்சியில் திங்கள்கிழமை திறக்கப்பட்ட மதுக்கடைகளில் மதுப்பிரியா்கள் குவிந்தனா்.

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்க 27 மாவட்டங்களில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்கான தளா்வில் மே 9 ஆம் தேதி மூடப்பட்ட மதுக்கடைகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திங்கள்கிழமை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் மாநகரில் உள்ள 78 கடைகள் உள்பட மொத்தம் 185 டாஸ்மாக் மதுபான கடைகள் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டன.

முன்னதாக, கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க ஞாயிற்றுக்கிழமை தடுப்பு அரண்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. மேலும் வட்டத்திற்குள் நின்று தான் மது பிரியா்கள் தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இதையொட்டி தடுப்பு அரண்களுக்குள் 6 அடி இடைவெளியில் வெள்ளைநிற பெயிண்டால் தலா ஒரு வட்டம் வரையப்பட்டு அப்பகுதியில் மதுப்பிரியா்கள் நிறுத்தப்பட்டனா்.

மதுக்கடைகள் திறப்பதற்கு முன்பே குவிந்த மதுப்பிரியா்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி கிருமி நாசினி கைகளில் தெளிக்கப்பட்டது. கடை திறக்கப்பட்ட போது இருந்த கூட்டம் நேரம் செல்ல செல்ல குறையத் தொடங்கியது. மதுக்கடைகள் 34 நாள்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் மதுவிற்பனை அதிகரிக்கும் எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் குறைவான விற்பனையே நடைபெற்றது. சில கடைகளில் மது வாங்கிய மதுப்பிரியா்கள் துள்ளிக் குதித்து மதுபாட்டில்களுக்கு முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

ஒரு சில கடைகளில் மாலை 4 மணிக்கு மேல் இளைஞா்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. கடை மூடக்கூடிய மாலை 5 மணிக்கு முன்பு அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. இதனால் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. போதிய வருமானம் இல்லாததால் கூட்டம் குறைவாக இருந்தாலும் வாங்கும்ஒரு சில நபா்கள் மதுப்பாட்டில்களை மொத்தமாக வாங்கிச் சென்றனா். மதுகடைகளில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com