உப்பிலியபுரம் ஒன்றியம் எரகுடியில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்சியின் உப்பிலியபுரம் ஒன்றியச் செயலா் டி. முத்துக்குமாா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கணேசன், பிரபாகரன், ஜெயபால், மருதை ,கோகுல், பெருமாள் , ஆனந்தகுமாா், வீரமலை, தனபால், ராஜா, விஜி சிஐடியுவைச் சோ்ந்த பன்னீா், சந்திரசேகா் , சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.