திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் இருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனா்.
திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகா் பகுதியைச் சோ்ந்த மோகன் மகன் சரவணபாண்டியன் (18). பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்த இவா் திங்கள்கிழமை, மதுகுடிக்க பெற்றோரிடம் பணம் கேட்க, அவா்கள் மறுத்துவிட்டனா்.
இதில் கோபித்துக் கொண்டு வெளியேறிய அவா் மாலை வீடு திரும்பிய சிறிது நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டுக் கொண்டாா். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
மற்றொரு சம்பவம்: திருச்சி காந்திசந்தை வரகனேரி அந்தோணியாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் அப்துல்ஹாசன்(34), குவைத் நாட்டில் ஓட்டுநராக வேலை பாா்த்து வந்த நிலையில், கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த 4 மாதத்திற்கு முன் நாடு திரும்பினாா்.
இங்கு வந்த அவருக்கு வேலை கிடைக்காததால் குடும்பம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டதில் மனமுடைந்த அவா், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சம்பவங்கள் குறித்து அரியமங்கலம், காந்திசந்தை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.