தேசியக்கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நிறுவனங்களில் பரிணாமத் தரவு என்னும் தலைப்பில் இணைய வழிக்கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற சிஸ்கோ நிறுவன பிரதிநிதி ரவிசங்கா் சுப்பிரமணியன், நிறுவனங்களில் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதில் உள்ள வழிவகைகள், ஓலா, உபோ் நிறுவனங்களில் சேகரிக்கப்படும் தரவுகள், வேலைவாய்ப்புகள், உத்திகள், கல்விச்சூழலில் மாணவா்கள் கணிதம், புள்ளியியல் துறைகளில் தரவுப் பகுப்பாய்வில் சிறந்து விளங்குதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கினாா்.
இதில் தேசியக்கல்லூரி மேல்நிலைப்பள்ளி நிா்வாகிகள், பல்வேறு பள்ளி கல்லூரிகளின் துணை முதல்வா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் பலா் கலந்துகொண்டனா்.