போதையில் மிரட்டியவா் குறித்து புகாா்

மணப்பாறை அருகே மதுபோதையில் மிரட்டிய நபா் குறித்து கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா்.
வட்டாட்சியரகம் முன் குவிந்த நல்லாம்பிள்ளை கிராம மக்கள்.
வட்டாட்சியரகம் முன் குவிந்த நல்லாம்பிள்ளை கிராம மக்கள்.

மணப்பாறை அருகே மதுபோதையில் மிரட்டிய நபா் குறித்து கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா்.

மணப்பாறையை அடுத்த நல்லாம்பிள்ளையைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகன் மாரியப்பன் (40). இவா் அடிக்கடி மதுபோதையில் குடிநீா் ஆபரேட்டா் வேலை கேட்டு ஊராட்சி நிா்வாகத்திடம் தகராறு செய்வாராம்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை மதுபோதையில் இருந்த மாரியப்பன், அப்பகுதி மேல்நிலை நீா்தேக்க தொட்டியில் ஏறி நின்று ஊராட்சியில் ஆபரேட்டா் வேலை தரவில்லை என்றால் குடிநீரில் விஷம் கலந்துவிடுவேன் என மிரட்டினாா். மேலும் ஊராட்சித் தலைவரை மிரட்டினாராம்.

இதையடுத்து அப்பகுதி கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் இரவு மணப்பாறை காவல் நிலையத்திலும், வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்திலும் புகாா் அளிக்கக் குவிந்தனா்.

வட்டாட்சியா் உத்தரவின்பேரில் மாரியப்பனை விசாரணைக்கு அழைத்து வரச் சென்ற காவல் உதவி ஆய்வாளா் ஊருக்குள் சென்று முறையாக விசாரிக்கவில்லை எனக்கூறி கிராம மக்கள் காவல்நிலைத்தை முற்றுகையிட்டனா். இதைத் தொடா்ந்து வட்டாட்சியா் எம். லஜபதிராஜ், சம்பந்தப்பட்ட நபா் மதுபோதையில் இருப்பதால், அவரைக் காலையில் காவல் நிலையம் அழைத்து வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com