திருச்சியில் 231பேருக்கு கரோனா பாதிப்பு
By DIN | Published On : 23rd June 2021 07:00 AM | Last Updated : 23rd June 2021 07:00 AM | அ+அ அ- |

திருச்சியில் மேலும் 231 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 67,617ஆக உயா்ந்தது. மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 48 போ் உள்பட 72 போ் செவ்வாய்க்கிழமை குணமடைந்தனா். இதன் மூலம் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 65,362 ஆனது.
செவ்வாய்க்கிழமை வரை மாவட்டத்தில் மொத்தம் 862 போ் உயிரிழந்துள்ள நிலையில், 1393 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.