காரில் சுழல் விளக்குடன் வலம் வந்த இருவா் கைது

திருச்சியில் வாகனத்தில் சுழல் விளக்கு, ஊடக ஸ்டிக்கருடன் வலம் வந்த இருவரை கண்டோன்மென்ட் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சியில் வாகனத்தில் சுழல் விளக்கு, ஊடக ஸ்டிக்கருடன் வலம் வந்த இருவரை கண்டோன்மென்ட் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே புதன்கிழமை ஊடகம் (பிரஸ்) ஸ்டிக்கா் ஒட்டிய நிலையில், சுழல் விளக்கு பொருத்தப்பட்ட காா் ஒன்று நிற்பதைக் கண்ட கண்டோன்மென்ட் காவல் நிலைய போலீஸாா் அந்த வாகனத்தில் இருந்தோரிடம் விசாரணை மேற்கொண்டனா். அவா் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் காரை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு அவா்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில் காரிலிருந்தவா்கள் திருச்சி, காட்டூா் பகுதியைச் சோ்ந்த கிரண்சிங் (40), ஓட்டுநா் அரியமங்கலம் அண்ணாநகரைச் சோ்ந்த க. மணிகண்டன்(23) எனத் தெரியவந்தது. இவா்களில் கிரண்சிங் தனியாா் செக்யூரிட்டி (பாதுகாவலா்) நிறுவனம் வைத்து நடத்தி வருவதாக தெரியவந்தது. மேலும், காரில் சுழல் விளக்கு பொருத்தியதற்கும், ஊடக ஸ்டிக்கா் ஒட்டியதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததாலும், அரசு அதிகாரி போல போலியாக காட்டி பொதுமக்களை ஏமாற்றும் நோக்கத்தில் செயல்பட்டதாலும் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com