ஸ்ரீரங்கத்தில் திருவானைக்கா பெட்ரோல் பங்க் முன்இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஸ்ரீரங்கம் பகுதிச் செயலா் ஜெயக்குமாா் தலைமையில் நூதன ஆா்ப்பாட்டம் செய்தனா்.
இருசக்கரவாகனத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி திருவோடு ஏந்தி, சங்கு ஊதி நூதன முறையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் சுரேஷ், பகுதித் தலைவா் சந்துரு,லோகநாதன் ஆகியோா் பேசினா். பகுதிக் குழு உறுப்பினா்கள் கண்ணன், வெங்கடேஷ், அருண், பிரசன்னா, விஜய், சிபிஎம் பகுதி செயலா் தா்மா, கிளைச் செயலா் முத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.