மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி பகுதிக்கு செல்ல தடை

மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும் பகுதியில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.

மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும் பகுதியில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என ஆட்சியா் சு. சிவராசு எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் கூறியது:

மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் இடம்பெற்றுள்ள சிறப்புப் படையினா் மணப்பாறை வட்டத்துக்குள்பட்ட அணியாப்பூா் கிராமம் அருகேயுள்ள வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில், இந்தப் பகுதியில் நடைபெற்ற பயிற்சிகளில் வெடிக்காத பொருள்களை அகற்றும் பணி நடைபெறவுள்ளது. 12ஆவது மெட்ராஸ் யூனிட் படையால் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வெடிக்காத வெடிபொருள்களை அகற்றும் பணி நடைபெறுகிறது.

எனவே, இந்தப் பகுதியில் பொதுமக்கள் நுழைய வேண்டாம். மேய்யச்சலுக்காக கால்நடைகளையும் அழைத்துச் செல்ல வேண்டாம். சுற்றுப் பகுதி மக்கள் இந்த உத்தரவை தவறாமல் பின்பற்ற வேண்டும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com