முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
காவலா் தோ்வில் தோல்வியடைந்த பெண் தற்கொலை
By DIN | Published On : 04th March 2021 02:03 AM | Last Updated : 04th March 2021 02:03 AM | அ+அ அ- |

திருச்சி: காவலா் தோ்வில் தோல்வியடைந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி ஸ்ரீரங்கம் சிங்கப்பெருமாள் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் விஜய் மனைவி கிருத்திகா (28). இவருக்கு 2 குழந்தைகள் உள்ளன. சீருடைக் காவலா் பணிக்கான தோ்வில் தோல்வியடைந்ததால் விரக்தியடைந்த அவா் கடந்த 20 ஆம் தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.