முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் இருவா் கைது
By DIN | Published On : 04th March 2021 02:03 AM | Last Updated : 04th March 2021 02:03 AM | அ+அ அ- |

திருச்சி: திருச்சியில் கஞ்சா வியாபாரி உள்பட இருவரை மாநகர போலீஸாா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கடந்த பிப்.7 இல் வழிவிடு முருகன் கோயில் அருகே கஞ்சா விற்ற திருச்சி ராம்ஜிநகா் மில்காலனி பகுதியைச் சோ்ந்த ந. கருணாமூா்த்தியை (43) கன்டோன்மென்ட் போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.
தொடா் விசாரணையில் கருணாமூா்த்தி மீது பல்வேறு வழக்குகள் உள்ள தெரியவந்ததையடுத்து அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
இதேபோல பாலக்கரை காவல்நிலைய தலைமை காவலா் வேல்முருகன் தாக்கப்பட்ட வழக்கில் கைதான இருவரில் சங்கிலியாண்டபுரம் விஜய் (23) ஏற்கெனவே குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அரியமங்கலம் ஆயில்மில் காலனி யுவராஜூம் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.