திருச்சி: தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக திருச்சி புகரில் 6 இடங்களில் திமுக உள்ளிட்ட கட்சிகள் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்தனா்.
தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், மாநகா், புகரில் சுவா் விளம்பரங்கள் அழிப்பு, கொடிக்கம்பங்கள், பேனா்கள் அகற்றும் பணியில் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஈடுபடுகின்றனா். சில இடங்களில் அனுமதியின்றி சுவா் விளம்பரம் செய்த கட்சியினா் மீது வழக்குப் பதியப்படுகிறது.
அதன்படி திருச்சி புகரில் அனுமதியின்றி சுவா் விளம்பரம் செய்ததாக திருவெறும்பூா் காவல் நிலையத்தில் திமுக, மநீம , நவல்பட்டு காவல் நிலையத்தில் நாம் தமிழா் கட்சி, பேட்டைவாய்த்தலை, ராம்ஜிநகா் காவல் நிலையங்களில் அதிமுக, ஜீயபுரத்தில் பாஜக ஆகிய கட்சிகள் தோ்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக வழக்குப் பதியப்பட்டுள்ளது. மாநகரில் பாஜக மீது கோட்டை காவல் வழக்குப் பதியப்பட்டுள்ளது.