காட்டுப்புத்தூா் அருகே மதுபானங்களைப் பதுக்கி வைத்த இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
முசிறி மதுவிலக்கு அமல்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சிவராமன் தலைமையிலான காவலா்கள், காட்டுப்புதூா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது மருதம்பட்டியில் மோகனூா் பெரியசாமி, மேய்க்கல்நாயக்கன்பட்டியில் ரமேஷ் ஆகிய இருவரும் மதுபானங்களைப் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் கைது செய்யப்பட்டனா்.