திருச்சி கருமண்டபம் சோதனைச் சாவடியில் வெள்ளிக்கிழமை பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் பிடிபட்ட ரூ. 4 கோடி திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
பேரவைத் தோ்தலையொட்டி திருச்சி மேற்குத் தொகுதி பறக்கும் படையினா் கருமண்டபம் சோதனை சாவடியில் வெள்ளிக்கிழமை நடத்திய வாகனச் சோதனையில் ஒரு வேனில் இருந்த ரூ. 4 கோடியை பறிமுதல் செய்து வேன் ஓட்டுநரிடம் விசாரித்தபோது வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்ப பணத்தைக் கொண்டு சென்றதும், அந்தப் பணத்துக்கு உரிய ஆவணம் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டது.