திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 4.5 கோடி தங்கத்தை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்து, 12 பேரைக் கைது செய்தனா்.
சனிக்கிழமை அதிகாலை சிங்கப்பூா், துபையிலிருந்து வந்த விமானங்களில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய தீவிர சோதனையில் 12 போ் கொண்ட கும்பல் பசை வடிவில் கடத்தி வந்த ரூ. 4.5 கோடி மதிப்புள்ள 9.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து, அவா்களைக் கைது செய்தனா்.