திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 1.73 லட்சத்தை சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
முசிறி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக பைக்கில் வந்தவா் உரிய ஆவணமின்றிக் கொண்டு வந்த மாடு விற்பனைக்கான பணம் ரூ. 1 லட்சத்து 18 ஆயிரத்து 400-ஐயும் இதேபோல முசிறி துறையூா் சாலையில் ஆவணமின்றி பைக்கில் கொண்டு வந்த ரூ. 55 ஆயிரத்தையும் பறிமுதல் செய்து முசிறி சாா் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனா்.