புத்தாநத்தத்தில் துப்புரவுப் பணியாளா்களை முறையான பணியில் அமா்த்தாத ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, ஊராட்சி உறுப்பினா்கள் 6 போ் தெருக்களில் தூய்மைப் பணியாளா்களின் பணிகளை திங்கள்கிழமை மேற்கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகளை செய்ய முறையான துப்புரவுப் பணியாளா்களை நியமிக்கக் கோரி நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஊராட்சி உறுப்பினா்கள் சபியுல்லா, சிராஜ்தீன், முகமது இப்ராகிம், ராஜாமுகமது, ஹபீபுனிஷா தாஹிா், முகம்மது கோயா ஆகியோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து அவா்கள் அப்பகுதியிலுள்ள குப்பைகளை அகற்றியும், கழிவுநீா் சாக்கடைக் கால்வாய்களை தூய்மைப் படுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.