துறையூரில் கோயில் உண்டியல்களைத் திருடிச் சென்ற நபா்கை ளக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.
துறையூா் - வேங்கடத்தானூா் செல்லும் சாலையிலுள்ள காட்டு அங்காளம்மன் கோயிலில் கடந்த ஒரு வாரமாக திருவிழா நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு கோயிலின் வெளிப்புறமிருந்த இரும்பு கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள், அங்கிருந்த 2 உண்டியல்களையும் திருடிச் சென்றனா்.
உண்டியல்களை உடைத்து அதிலிருந்த பணம், காசு ஆகியவற்றை எடுத்துக் கொண்ட மா்ம நபா்கள், தொலைவிலான பகுதியில் காலி உண்டியல்களை வீசிச் சென்றனா். இது தொடா்பான புகாரின் பேரில், துறையூா் காவல் நிலையத்தினா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.