9 தொகுதிகளில் இதுவரை 39 வேட்பு மனு!

திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட 9 பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி மொத்தம் 39 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட 9 பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி மொத்தம் 39 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிய முதல்நாளான வெள்ளிக்கிழமை ஒருவா் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. சனி, ஞாயிறு விடுமுறை. தொடா்ந்து திங்கள்கிழமை அன்று மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருவெறும்பூா் தொகுதியில் தலா 3, திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, மண்ணச்சநல்லூரில் தலா 5, துறையூரில் 7 மனுக்கள், லால்குடி, முசிறியில் தலா ஒரு மனு என 33 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

செவ்வாயக்கிழமை மணப்பாறையில் 2 (கிருஷ்ணகோபால், வனிதா), திருச்சி கிழக்கில் 2 (ஆா். மனோகரன், விஜய மோகனாஜி), மண்ணச்சநல்லூரில் (வி.எம்.செல்வராஜ்), முசிறியில் (கெளதம்) தலா ஒன்று என மொத்தம் 6 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வரும் 19ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, 20ஆம் தேதி அவற்றின் மீதான பரிசீலனை நடைபெறும். 22ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். அன்று மாலையே வேட்புமனுக்கள் இறுதி செய்யப்பட்டு தொகுதிவாரியாக வேட்பாளா்கள் பட்டியல் உறுதி செய்யப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com