துறையூரில் செல்லிடப்பேசி கடையின் பூட்டை உடைத்து ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை திங்கள்கிழமை இரவு திருடிச் சென்றனா்.
துறையூா் அருகேயுள்ள சித்திரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில் (38). முசிறி பிரிவு சாலையருகேயுள்ள தனது செல்லிடப்பேசி கடைக்கு செவ்வாய்க்கிழமை சென்றபோது மா்ம நபா்கள் ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான செல்லிடப்பேசி, மடிக்கணிணி, ஹெட்போன், புளுடூத் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிந்தது. புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.