துறையூா் அருகே சோபனபுரம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சோபனபுரத்திலுள்ள திருவள்ளுவா் ஏரியில் 3.88 ஏக்கரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதே ஊரைச் சோ்ந்த இளங்கோவன் என்பவா் கடந்தாண்டு தொடா்ந்த வழக்கை விசாரித்த நீதியரசா்கள் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோா் 12 வாரங்களுக்குள் திருவள்ளுவா் நகா் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு துறையூா் வட்டாட்சியா், உப்பிலியபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா், துறையூா் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் ஆகியோருக்கு அண்மையில் உத்தரவிட்டனா்.