தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது.
தமிழகத்தில் தோ்தல் முன்கள பணியாளா்கள், அரசு ஊழியா்கள், 45 வயதைக் கடந்தவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி அரசு மருத்துவமனை, ஆட்சியா் அலுவலகம் ஆகியவற்றில் சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 1ஆம் தேதிமுதல் நடைபெற்று வரும் இம்முகாமில் மொத்தம் 426 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநா்கள், நடத்துநா்கள், பணிமனை பணியாளா்கள் ஆகியோருக்கு கரோனா தடுப்பூசி முகாம் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வண்ணாா்பேட்டை பணிமனையில் நடைபெற்றது.
பணிமனை மேலாளா் சரவணன், துணை மேலாளா் அழகா்சாமி ஆகியோா் முகாமை தொடங்கிவைத்தனா். மொத்தம் 3,500 பேருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவித்தன.